தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, திமுக எம்.பி. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சந்துரு பேசும்போது, இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருப்பதாகவும், கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் கலைஞர் கைது ஒரு தவறான முன்னுதாரணம். அவருடைய கைதில் ஏராளமான அத்துமீறல்கள் இருந்தன என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்ட போது எவ்வளவு அத்துமீறல் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் இதை பத்தி அதிகம் பேச விரும்பவில்லை என்றும் பேசினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…