தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, திமுக எம்.பி. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சந்துரு பேசும்போது, இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருப்பதாகவும், கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் கலைஞர் கைது ஒரு தவறான முன்னுதாரணம். அவருடைய கைதில் ஏராளமான அத்துமீறல்கள் இருந்தன என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்ட போது எவ்வளவு அத்துமீறல் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் இதை பத்தி அதிகம் பேச விரும்பவில்லை என்றும் பேசினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…