ஆன் லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் செல்போனில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற தகுதி உள்ளது என கூறி, வங்கி விவரங்களை கேட்டுள்ளனர்.
பின்னர், சுரேஷ் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை பெற்று கொண்ட கும்பல் வங்கி கணக்கில் இருந்து, 24 ஆயிரத்து 955 ரூபாயை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, பலன் இல்லாததால், தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த போலீசார், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…