பள்ளி செல்லும் பாதையில் யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து வசதி கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் மனு அளித்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி குழந்தைகள் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொம்மதாதனூர் அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் நிலை உள்ளது என கூறப்படுகிறது. பள்ளி சென்று வரும் பாதை யானைகள் நடமாட்டம் உள்ள காட்டு வழி பாதை என்பதால், பள்ளி குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த பள்ளி குழந்தைகள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், காட்டு யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்கவும், பள்ளி சென்று வர பேருந்து வசதி செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…