பள்ளி செல்லும் பாதையில் யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து வசதி கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் மனு அளித்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி குழந்தைகள் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொம்மதாதனூர் அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் நிலை உள்ளது என கூறப்படுகிறது. பள்ளி சென்று வரும் பாதை யானைகள் நடமாட்டம் உள்ள காட்டு வழி பாதை என்பதால், பள்ளி குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த பள்ளி குழந்தைகள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், காட்டு யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்கவும், பள்ளி சென்று வர பேருந்து வசதி செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…