சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக்கோட்டை விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கப்பட்டு 11ஆம் தேதி நிறைவு பெற்றது .
துவக்க விழாவை, கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ். முகமது ஜலீல் நிர்வாக அதிகாரிகள் எஸ். எம் .சீனி மொகைதீன், எஸ் .எம் .சீனி முகமது அலி யார் மற்றும் உலக அளவிலான சதுரங்க கழகத்தின் முன்னாள் தலைவர் சுந்தர் துவக்கி வைத்தனர் .
இதில், 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மாநில அளவில் இருந்து கலந்து கொண்டனர். அதில், ஆண்கள் பிரிவில் 10 பெண்கள் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர் .
ஆண்கள் பிரிவில், சாம்பியன் பட்டத்தை மாஸ்டர் அஸ்வந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் பிரிவில் தேஜஸ்வினி திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்தும் பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட 20 போட்டியாளர்களும் தேசிய அளவில் நியூ டெல்லியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் 15 வயதிற்கு உட்பட்ட போட்டிகளில் மாநிலத்தின் சார்பாக பங்கேற்க உள்ளனர் .
போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மெடல் கோப்பை மற்றும் முப்பதாயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவை, கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலில், தலைமை தாங்கி துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். சதுரங்க போட்டிகளின், இன்டர்நேஷனல் ஆர்பிட்டர் அனந்தராம் நன்றி உரை வழங்கினார் .
கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ். எம். சீனி முகைதீன், எஸ். எம். சீனி முகமது அலி யார், எஸ். எம். நிலோஃபர் பாத்திமா, எஸ். எம். நாச்சியா பாத்திமா துணை முதல்வர் டாக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…