ஹனிமூன் கொண்டாட சென்னையில் இருந்து இந்தோனோசியா சென்ற டாக்டர் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் டாக்டர் விபூஷ்ணியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற டாக்டருக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து தேனிலவை கொண்டாட இந்தோனேசியா நாட்டிற்கு புதுமணத் தம்பதியினர் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள
சுற்றுலா தளத்திற்கு சென்ற அவர்கள் கடலில் மோட்டார் படகில் சென்றபடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
படகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று நிலை தடுமாறி இருவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து பொதுமக்கள் தந்த தகவலில் சென்ற கடலோர காவல்படையினர் நீண்ட நேரம் போராடி லோகேஸ்வரனை சடலமாக மீட்டனர்.
விபூஷ்னியாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட நேரம் ஆகியும் விபூஷ்ணியாவின் உடல் கிடைக்காததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருவரது வீட்டிற்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கதறி அழுதனர். திருமணம் முடித்து 10 நாட்களேயான நிலையில் டாக்டர் தம்பதிக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…