திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் காவல்துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நிகழ்ந்த குற்றங்களில் உண்மை சம்பவங்களை அறிந்து குற்றவாளிகளை கைது செய்யவும் பெரிதும் உதவுகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஜூன் 24ம் தேதி எழும்பூர், காவல் உயரதிகாரிகள் நட்பகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் 43 இடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எழும்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, வீடியோ பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கேமராக்கள் இயங்கவில்லை என்றாலோ, யாரேனும் சேதப்படுத்தினாலோ, தானியங்கி மூலம் இ-மெயில் முகவரிக்கு எச்சரிக்கை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது,
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…