Categories: GOVT/POLITICS

அரசுப் பள்ளிகளை தாரை வார்க்கவில்லை – அன்பில் மகேஸ் விளக்கம்

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்துக்கு தனியார் பள்ளி சங்கங்கள் தங்களது பங்களிப்பை தருவதாக கூறியதை திரித்து, அரசுப் பள்ளிகளை தத்துக்கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டன அறிக்கை விடுவதை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அன்பில் மகேஸ் அளித்த பேட்டியில், “தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த என்ன திட்டங்களை கொண்டு வரலாம், பள்ளிக் கல்வி த்துறை மறுகட்டுமானத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்யலாம், என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் பேசப்பட்டது என்ன என்பது ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கு தெரிந்திருக்கும். ஒரு செய்தி வெளியாகிறது என்றால் அது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஏன் எனில் பத்திரிகையில் வரும் செய்திகளைதான் உண்மை என மக்கள் பலர் நம்புகின்றனர். எனவே வரும் செய்திகள் உண்மையானதா இல்லையா என்பதை செய்தியாளர்கள் முதலில் பார்க்க வேண்டும்.

ஒரு செய்தி வந்தால், அதை முதலில் சரிபார்க்க வேண்டும். நான் அப்படி பேசினேனா? நான் பங்கேற்ற விழாவில் அந்த மாதிரியான கோரிக்கை ஏதாவது வந்திருக்கிறதா? அந்த கோரிக்கையில் தத்தெடுப்பது, தாரைவார்ப்பது போன்ற தகவல் வந்ததா என்பதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டுத்தான் அவை செய்தியாக வெளியிடவேண்டும். தத்தெடுக்கிறார்கள், தாரை வார்க்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தவுடன் எதிர்க்கட்சிகள் உண்மையை உணராமல் இத்திட்டத்திற்கு வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறுகின்றனர்.

இதனால், பள்ளிக் கல்வித்துறை சார்ந்தவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, முழுமையாக ஒரு தகவலை தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பவர்களை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 லட்சம் ரூபாய் கொடுத்து ஆரம்பித்து வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் சிஎஸ்ஆர் மூலம் இதுவரை 504 கோடி ரூபாய் வந்துள்ளது. அதில் ரூ.350 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டத்துக்கு தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களது பங்களிப்பினை தருவதாக கூறினார்கள். அதற்கு நான் நன்றிதான் தெரிவித்தேன். ஆனால், அதை தாரைவார்த்துவிட்டோம், தத்துகொடுத்துவிட்டோம் என்று விமர்சனங்கள் எழுகின்றன. இது தொடர்பாக தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களது விளக்கத்தையும் கொடுத்துவிட்டனர். அது ஊடகம் மற்றும் பத்திரிகைகளிலும் வந்தது.

எஸ்எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி வந்தபோது, நமது கொள்கையை விட்டுக்கொடுத்து அந்த பணத்தை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றவர் முதலமைச்சர் அவர்கள். இன்றளவும் அதற்கான ரூ.500 கோடிக்கான சம்பளத்தை மாநில அரசுதான் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஏறத்தாழ 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் அடங்கியுள்ளனர். எவ்வளவு நிதிச்சுமை வந்தாலும், தமிழக மாணவர்களின் கல்வி எக்காரணம் கொண்டு தடைபட்டு விடக்கூடாது என்று கூறுபவர் தமிழக முதல்வர்.

கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஐயம் இருப்பின் எங்களிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள். விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், கண்டனம் தெரிவியுங்கள். விளக்கமும் கேட்காமல், நடந்தது என்னவென்றும் தெரியாமல் எதற்காக இத்தனை அவசரமாக கண்டன அறிக்கைகள் விடுகிறீர்கள் என்றுதான் எனக்கும் புரியவில்லை என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நீங்கள் நினைப்பது போல அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதோ, தாரைவார்க்க வேண்டிய அவசியமோ தமிழக அரசுக்கு இல்லை. பள்ளிக் கல்வித் துறை என்பது எங்களுடைய பிள்ளை. எங்கள் பிள்ளையை நாங்கள்தான் வளர்ப்போமே தவிர, தத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…

2 weeks ago

தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…

2 weeks ago

தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

2 weeks ago

“ஏஐ நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது” – கங்கை அமரன் வேதனை

சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…

2 weeks ago

சித்தராமையா ராஜினாமா: “வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என விளக்கம்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…

2 weeks ago

சிபிஎஸ்இ பிளஸ் 2 டிஜிட்டல் மதிப்பீட்டு சர்ச்சை: பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதான்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…

2 weeks ago