மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது .
திருவேடகம் இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமான் ஆலயமான திருஏடகநாதர் கோவில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டும் நேற்று இரவு கோவிலிலிருந்து சுவாமி ஊர்வலமாக வைகை ஆற்றங்கரைக்கு விநாயகரும், குதிரை வாகனத்தில் ஏடகநாதரும் கேடயத்தில் திருஞானசம்பந்தரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வைகை ஆற்றங்கர அருகில் சர்வ அலங்காரத்தில் வைத்திருந்தனர்.
பின்னர், சிவனடியார்கள் சார்பாக வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆற்றில் ஏடு எதிர் ஏறும் வைபவம் நடைபெற்றது.
இதில், திருவேடகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இதில், கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…