ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி கோயில் தரிசனத்திற்காக கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.
ரவுண்ட் டிரிப்பாக செல்லும் இந்த பாரத் கவுரவ் ரயில் கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு ஜூலை 6ம் தேதி காலை 11.45 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காத்ரா நிலையத்தில் இருந்து ஜூலை 7ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் பாரத் கவுரவ் ரயில், கொச்சுவேலிக்கு ஜூலை 12ம் தேதி இரவு 11.15 மணிக்கு கொச்சுவேலியை வந்தடையும்.
இந்த ரயில் நாகர்கோயில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா, ஐதராபாத், நாக்பூர், போபால், ஆக்ரா, ஜம்மு நிலையங்கள் வழியாக செல்லும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…