திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் முதல் திருவொற்றியூர் வரை உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி அப்பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியை சேர்ந்த அஜித் என்ற நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வாலிபர் தனது கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பட்டமந்திரி அருகே சென்று கொண்டிருந்த இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஐஸ்வர்யா, கணவன் கண் முன்பாக உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அஜித்தின் 2 கால்களும் உடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…