திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் முதல் திருவொற்றியூர் வரை உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி அப்பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியை சேர்ந்த அஜித் என்ற நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வாலிபர் தனது கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பட்டமந்திரி அருகே சென்று கொண்டிருந்த இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஐஸ்வர்யா, கணவன் கண் முன்பாக உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அஜித்தின் 2 கால்களும் உடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…