செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மேஜர் ஆகாத பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலில் போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞரின் உறவுக்கார பெண்ணுக்கும், திருமணம் செய்துவைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதை யடுத்து திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்தகுளம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே மேற்கண்ட திருமண மண்டபத்தில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணமக்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி அதை உறதி செய்தனர். பின்னர் போலீஸ் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இரு வீட்டாரையும் எச்சரித்து அனுப்பினர். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…