சென்னை அடுத்த பீர்க்கன்காரணையில் கோவில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையன் திருட முயற்சி செய்தபோது, பொது மக்கள் சத்தம் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை தேவனேசன் நகரில் ஸ்ரீ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் வழக்கம் போல் கோவிலை பூட்டப்பட்ட நிலையில் மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பொது மக்கள் கூச்சலிட்டதும் மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம்பிடித்தான்.
இது குறித்து தகவல் அறிந்த பீர்க்கங்கரணை போலீசார் விரைந்து சென்று மர்ம நபர் கொண்டு வந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து அங்கிருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் அதே நபர் அப்பகுதியில் உள்ள மற்றொரு ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் பட்டுலிங்கம் என்பவரின் பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டையும் கொள்ளையன் உடைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…