ஈரோடு மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஈரோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெருந்துறை அருகேயுள்ள தோரணாவி தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில், மர்மநபர்கள் கும்பலாக காட்டு முயல்களை வேட்டையாடுவதாக, வன உயிரின கட்டுபாடு, கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வனச்சரக குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பட்டா நிலங்களில் ஏராளமானோர் கும்பலாக காட்டு முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சுற்றிவலைத்து பிடித்தனர். இதில், மொத்தம் 107 பேர் பிடிபட்ட நிலையில், அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…