ஈரோடு மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஈரோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெருந்துறை அருகேயுள்ள தோரணாவி தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில், மர்மநபர்கள் கும்பலாக காட்டு முயல்களை வேட்டையாடுவதாக, வன உயிரின கட்டுபாடு, கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வனச்சரக குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பட்டா நிலங்களில் ஏராளமானோர் கும்பலாக காட்டு முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சுற்றிவலைத்து பிடித்தனர். இதில், மொத்தம் 107 பேர் பிடிபட்ட நிலையில், அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…