மதுரை மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 2,752 தூய்மைப் பணியாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கி 2024ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டுக்கு இந்த விழாவை நடத்த வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 2,752 தூய்மை பணியாளர்களைக் கொண்டு கருணாநிதியின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.
சாதி,மத, இன, ஏற்றத் தாழ்வெனும் குப்பைகளை களைந்து, நல் சமூகம் படைத்த கலைஞரின் உருவத்தில், தூய்மைப்பணியாளர்கள் அணிவகுத்து நின்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதாவது அனைத்து தூய்மைப் பணியாளர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் கலைஞரின் உருவம் போல் அணிவகுத்த நிகழ்வை பார்வையிட்ட டிரம்ப் புத்தக நடுவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சான்றிதழையும் வழங்கினர்.
இச் சான்றிதழை தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…