தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தமிழக அரசு உத்தரவின்படி, இயற்கை மண்புழு உர விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமும் மண்புழு உரமும் தயாரிக்கும் நிலையம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பெரியகுளம் நகராட்சி சார்பாக மாதந்தோறும் 15 டன் உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அரசின் உத்தரவின் பேரில், வேளாண் துறையில் தரச்சான்று பெறப்பட்ட செழிப்பு இயற்கை உரம் என்ற பெயரில், பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விதமாக பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் மண்புழு உர விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் ஆணையாளர் கணேசன் மற்றும் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து, மண்புழு உரத்தினை விவசாயிகளுக்கு வழங்கினர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…