தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தமிழக அரசு உத்தரவின்படி, இயற்கை மண்புழு உர விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமும் மண்புழு உரமும் தயாரிக்கும் நிலையம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பெரியகுளம் நகராட்சி சார்பாக மாதந்தோறும் 15 டன் உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அரசின் உத்தரவின் பேரில், வேளாண் துறையில் தரச்சான்று பெறப்பட்ட செழிப்பு இயற்கை உரம் என்ற பெயரில், பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விதமாக பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் மண்புழு உர விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் ஆணையாளர் கணேசன் மற்றும் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து, மண்புழு உரத்தினை விவசாயிகளுக்கு வழங்கினர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…