மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

- Advertisement - WhatsApp

இதன் ஒரு பகுதியாக மதுரை ஒத்தக்கடை அடுத்து உள்ள கொடிக்குளம் தனித் தொகுதியான கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாடட்டம் நடத்தினர்.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வனிதா மற்றும் அன்ன லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் தங்களுடைய கிராமங்களை மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை இழக்க நேரிடும், மத்திய அரசு கிராமங்களுக்கு வழங்கும் சலுகைகளை இழக்க நேரிடும்.

- Advertisement - WhatsApp

அதே சமயம் எனவே எங்களை கிராமங்களை மாநகராட்சியோடு இணைத்தால் வரிகள் அதிகம் செலுத்த நேரிடும், இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

அண்ணா பல்கலை. வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை – பதிவாளர்

சென்னை: அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள விடுதி, உணவகம் மற்றும் வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை: பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார். “கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைகளை முடித்த பிறகு பல்கலை. வளாகத்தில் தங்கக் கூடாது.பல்கலை. வளாகத்தில்...