தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த தடகள வீரர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென்கொரியாவில் 2023 ஜுன் 4 முதல் 7 வரை 20 வயதுக்கு உட்பட்டோருக்கான “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023” போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள் 19 பதக்கங்கள் வென்றனர்.
இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சார்ந்த 4 தடகள வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். 4 × 400 மீ தொடர் ஓட்டத்தில் எம்.கனிஸ்டா டீனா (பெண்கள் பிரிவு) தங்கப்பதக்கமும், எம். சரண் மேகவர்ணம் (ஆண்கள் பிரிவு) வெள்ளிப் பதக்கமும், 4×100மீ தொடர் ஓட்டத்தில் (பெண்கள் பிரிவு) ஆர். அபிநயா மற்றும் எஸ். அக்சயா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 4 தடகள வீரர்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை (10.06.2023) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…