தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த தடகள வீரர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென்கொரியாவில் 2023 ஜுன் 4 முதல் 7 வரை 20 வயதுக்கு உட்பட்டோருக்கான “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023” போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள் 19 பதக்கங்கள் வென்றனர்.
இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சார்ந்த 4 தடகள வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். 4 × 400 மீ தொடர் ஓட்டத்தில் எம்.கனிஸ்டா டீனா (பெண்கள் பிரிவு) தங்கப்பதக்கமும், எம். சரண் மேகவர்ணம் (ஆண்கள் பிரிவு) வெள்ளிப் பதக்கமும், 4×100மீ தொடர் ஓட்டத்தில் (பெண்கள் பிரிவு) ஆர். அபிநயா மற்றும் எஸ். அக்சயா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 4 தடகள வீரர்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை (10.06.2023) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…