தென்காசி அருகே கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போலீசார் முன்னிலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட கும்பலின் வீடியோ வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலுக்கு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தனர். அதேபோல் தமிழக & கேரள எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள தெற்கு மேடு என்கிற கிராமத்தில் இருந்தும் அக்கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தனர்.
தூத்துக்குடியில் இருந்த வந்தவர்கள் தங்கள் காரில் சத்தமாக பாட்டு கேட்டபடி ஆட்டம் போட்டதால், சத்தத்தை குறைக்கும்படி தெற்கு மேடு பகுதி இளைஞர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.
இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் அங்கிருந்த கடைகளில் இருந்து விறகுக்கடைகளை எடுத்து வந்து மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் சென்ற போது அவரை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…