விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் நேற்று இரவு விட்டு, விட்டு சாரல்மழை பெய்தது. பகல் நேரத்தில் கடுமையாக வெயில் இருந்துவந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டமாக இருந்து, இதமான குளிர்காற்று வீசி வந்தது. மாலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் சாரல்மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு தொடர் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. சிவகாசி புறநகர் பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. திடீர் மழை காரணமாக சிவகாசி பேருந்து நிலையப் பகுதிகள், சாத்தூர் சாலை, காந்தி சாலை, மணி நகர், தெய்வானை நகர், விஸ்வநத்தம் சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் இரவு 8 மணி வரை மின்தடை ஏற்பட்டது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…