விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் நேற்று இரவு விட்டு, விட்டு சாரல்மழை பெய்தது. பகல் நேரத்தில் கடுமையாக வெயில் இருந்துவந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டமாக இருந்து, இதமான குளிர்காற்று வீசி வந்தது. மாலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் சாரல்மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு தொடர் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. சிவகாசி புறநகர் பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. திடீர் மழை காரணமாக சிவகாசி பேருந்து நிலையப் பகுதிகள், சாத்தூர் சாலை, காந்தி சாலை, மணி நகர், தெய்வானை நகர், விஸ்வநத்தம் சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் இரவு 8 மணி வரை மின்தடை ஏற்பட்டது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…