அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பொய் வழக்குப் பதிந்து சிறைபிடித்துள்ளதாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை அவர் மீது பொய் வழக்குப் பதிந்து சிறைப்பிடித்துள்ளதாக தெரிவித்தார். பாஜக ஆளாத மாநிலங்களில் விசாரணை அமைப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
மற்ற மாநிலங்களில் கைவரிசையை காட்டிவிட்டு தற்போது தமிழகத்தில் கால்பதித்துள்ளதாக குற்றம்சாட்டிய செல்வப் பெருந்தகை, தோழமை கட்சிகளை மிரட்டுவது அல்லது அவர்கள் மீது வழக்குப்போடுவது போன்ற சம்பவங்கள் மகாராஷ்டிரா, பீகாரில் அரங்கேறி உள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் செல்வப் பெருந்தகை, அம்மன் கே அர்ஜுனன், எம்எல்ஏ சரஸ்வதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, MRI கருவி வழங்கப்பட்ட 90 நாட்களில் அவற்றை பொருத்த வில்லை என CAG ஒரு பரிந்துரை அறிக்கையை வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டோம் என தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை செப்பனிட,பராமரிப்பு செய்ய வேண்டி உள்ளதால் அதற்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டி அளித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…