ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லபாளையம் கிராமத்தில் கடை நடத்தி வரும் முனியாண்டி மற்றும் சந்திரன் இருவரும் நண்பர்கள். அதே பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதி 9ம் வகுப்பு படிக்கும் மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்வது வழக்கம். தனியாக இருப்பதை கவனித்த முனியாண்டி மற்றும் சந்திரன் இருவரும் மாணவி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மிரட்டி இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது மட்டுமின்றி இந்த விஷயத்தை வெளியில் கூறினால் மாணவியின் பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குற்றவாளிகள் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போதேல்லாம் அடிக்கடி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இந்த கொடுமை நடந்து வந்துள்ள நிலையில், மாணவி எப்போதும் சோகமாக இருந்ததை கண்டு பெற்றோர் தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போதுதான் வேறு வழியின்றி தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் வேதனை அடைந்த பெற்றோர் இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முனியாண்டி மற்றும் சந்திரனை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…