Categories: Uncategorized

இறக்கும் தருவாயில் உடல்உறுப்புகள் தானம்

ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் யானமாலா ஆனந்த். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆனந்த் கடந்தவாரம் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். பங்காருபாளையத்தில் விபத்தில் சிக்கிய ஆனந்த் அருகில் உள்ள வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஆனந்த்தின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் அடையாத நிலையில் அவருடைய மூளை தனது செயல்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இதையடுத்து அவர் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர் தெரிவித்ததால், ஆனந்த்தின் உடல்உறுப்புகளை பிறருக்கு தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதித்தனர். பின்னர் ஆனந்த்தின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பிற மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆனந்த்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையை பொறுத்தவரை அதிக அளவில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

சென்னை ஒன் செயலியில் ரூ.1 டிக்கெட் ஆஃபர்; பேருந்து, மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…

6 hours ago

கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…

2 weeks ago

தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…

2 weeks ago

தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

2 weeks ago

“ஏஐ நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது” – கங்கை அமரன் வேதனை

சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…

3 weeks ago

சித்தராமையா ராஜினாமா: “வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என விளக்கம்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…

3 weeks ago