அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகளுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து அவரிடம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய 2 துறைகளும் மாற்றப்பட்டு அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மின்சாரத்துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…