இந்தியாவிலேயே முதல் முறையாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் குறு, சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் நாள் விழாவை தொடக்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க திட்டத்திற்கு உயிரூட்டும் வகையில், ஆண்டிற்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 4 பெருங்குழுமங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஏற்கனவே 6 இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், கூடுதலாக 6 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியை விட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் Þடாலின், பொருளாதார வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…