மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரமங்கலம் அருகே உள்ள எலுவம்பட்டிக்கு செல்லும் 26ஆம் எண் கொண்டஅரசு பேருந்து படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் பயணத்தின்போது பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் ஏறும் போதும் இறங்கும் போதும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவர் பொதுமக்களை எச்சரித்துக் கொண்டே வருவது பொதுமக்களிடையே அரசு பஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் கேட்டபோது, கிளை மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தால் பேருந்து எப்.சி.க்கு விடும்போது வேலை பார்த்துக் கொள்ளலாம் , தற்போது எப்படியாவது அனுசரித்து ஓட்டுங்கள் என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பேருந்து படிக்கட்டுகளை உடனடியாக சீர் செய்து மக்கள் அச்சமின்றி பயணம் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…