டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, தீன் மூர்த்தி பவன் இல்லம் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வந்தது. ஜவஹர்லால் நேரு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
அந்த இல்லத்தை அவரது நினைவாக 1964ஆம் ஆண்டு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது. இதனிடையே, இந்த அருங்காட்சியகத்தின் பெயரில் நேருவின் பெயரைவிட்டு பிரதமரின் அருங்காட்சியகம் என்று மத்திய காலச்சார அமைச்சகம் நேற்று அறிவித்தது.
மத்திய அரசின், இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் சொந்தமாக வரலாறு இல்லாதவர்கள் வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்றும், அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் பண்டித ஜவகர்லால் நேரு புகழ் குறைந்துவிடாது என்றார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…