பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்த்து, அவர்களின் நலன் கருதி நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செயல்பட்டு வரும் GK தனியார் பள்ளியில்‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி ஐ.பி.எஸ். பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை கலியமூர்த்தி நினைவு கூர்ந்தார். மாணவி ஒருவர், இந்தியாவுடைய மிகப்பெரிய பெருமை என்ன என்று அப்துல் கலாமை பார்த்து வினவினார்.
அதற்கு பதில் அளித்த அப்துல் கலாம், இந்துக்களின் அடையாளம் குத்துவிளக்கு, கிறிஸ்துவர்களின் அடையாளம் மெழுகுவர்த்தி இவற்றை ஏற்றி வைத்த நான் ஒரு இஸ்லாமியர். இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் மிகப்பெரிய பெருமை என கூறியதாக கலியமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் பிள்ளைகளிடம் செல்போன் தரக்க்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். இதில் பள்ளி தாளாளர் குமாரராஜா, அருண், திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பேருராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் சின்னமணி, அரசு மருத்துவர் ஜெயச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…