Categories: Uncategorized

அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் நலத்திட்ட உதவி

சிவகங்கையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனைகளை சார்ந்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் வழங்கி தெரிவிக்கையில்:
முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்துத்தரப்பு மக்களும் பாராட்டும் வண்ணம் உள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டமும் சமவளர்ச்சி பெறுவதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், அவர்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாத்து வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் முந்தைய காலத்தில் செயல்படுத்தப்பட்ட குடிசையில்லா தமிழகமாக மாற்றிடும் வகையில், வீடு வழங்கும் திட்டம், சுகாதாரம், கழிப்பறை, டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வேறு பெயர்களில் ஒன்றிய அரசு அளவிலும், தேசிய அளவிலும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
அதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கடந்த 23.07.2009 அன்று துவங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒன்றிணைந்த 23.09.2018 முதல் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் திட்டப்பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் வரை மருத்துவச் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 16 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 1 வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 8,553 பயனாளிகளுக்கு ரூ.8,88,72,675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடையவதற்கு தகுதியாக ரூ.1,20,000 மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து விழிப்புணர்வுப் பணிகளும் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுதவிர மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், 7 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு இனிப்பு மற்றும் பழவகைகள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் ஆகியவைகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் சே.முத்துத்துரை, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் நா.குணசேகரன், நகாட்சி ஆணையர் லெட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் செவிலியர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…

2 weeks ago

தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…

2 weeks ago

தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

2 weeks ago

“ஏஐ நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது” – கங்கை அமரன் வேதனை

சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…

3 weeks ago

சித்தராமையா ராஜினாமா: “வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என விளக்கம்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…

3 weeks ago

சிபிஎஸ்இ பிளஸ் 2 டிஜிட்டல் மதிப்பீட்டு சர்ச்சை: பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதான்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…

3 weeks ago