தமிழ்நாட்டில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப் 4 தேர்வுகளை எழுதிவிட்டு, அதற்கான முடிவு எப்போது வெளியிடப்படும் என காத்திருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் 6,224 பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தான் என்றாலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என பலரும் பங்கேற்று தேர்வை எழுதினர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாக, அக்டோபர் மாதத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி-யின் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும் என்ற அறிவிப்பால், தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாதங்களுக்கு முன்பே தேர்வு முடிவுகள் வெளியாவதால், அரசு பணியில் விரைவில் சேர்ந்து பணியாற்றலாம் என்று தேர்வெழுதியவர்கள் ஆவலில் இருக்கின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…