விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் கடந்த 8 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள உறவினரை பார்த்து வருவதாக கூறிச்சென்ற தேவி, பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன மனைவியை, கணேஷ்பாபு பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கணேஷ்பாபு, வீரசோழன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து, காணாமல் போன புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…