ஈரோடு:
அந்தியூர் அருகே 20 அடி பள்ளத்
தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில்,
நான்கு குழந்தைகள் உட்பட 35
பயணிகள் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில்
இருந்து பர்கூர் மலைப்பகுதியில்
உள்ள கொங்காடை பகுதிக்கு,
59 பயணிகளுடன் நேற்று மாலை
அரசுப் பேருந்து சென்றது.
பேருந்தை வெங்கடாசலம் (39) என்பவர் ஓட்டிச்சென்றார். மணியாச்சிப்பள்ளம் அருகே சென்றபோது, எதிரே வந்த
இரு சக்கர வாகனத்துக்கு
வழிவிடும்போது, சாலையில்
இருந்து இறங்கிய பேருந்து,
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது.
இதில், 4 குழந்தைகள்
உட்பட 35 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அந்தியூர் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டனர். காயமடைந்தவர்களில் 10
பேர் பெருந்துறை அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைக்கு
மேல் சிகிச்சைக்காக அனுப்பி
வைக்கப்பட்டனர்.
விபத்து
நடந்த பகுதியைப் பார்வை
யிட்ட அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.
வெங்கடாசலம், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பர்கூர் போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…