மேட்டுப்பாளையத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் கம்பர் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் அதே பகுதியில் அடமானக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி பிரேமா தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பிரேமாதேவியின் பெற்றோர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் வசித்து வருகின்றனர்.
கோடை விடுமுறை என்பதால் சஞ்சய்குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மொட்டை மாடியில் பேரன், பேத்திகளுடன் தாத்தா பாபுபால் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை நிகாஷா மாடியில் இருந்த கம்பி மீது ஏற முயற்சி செய்து கால் இடறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி நிகாஷா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், விகாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…