கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள இனி தடுப்பூசி அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது மூக்கு வழியாகவும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூக்கு வழியாக நவீன கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
பி.பி.வி 154 என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4417 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 496 ஆக உயர்ந்தது. தற்போது 52,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மேலும் 23 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,28,030 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…