கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்டாபர் 5ம் தேதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த தோகைமலை ஒன்றிய துணை பெருந்தலைவரும் – கள்ளை ஊராட்சி 3வது வார்டு உறுப்பினருமான திருமதி சி.பாப்பாத்தி சின்னவழியான் தலைமையில், நாகனூர் ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் திருமதி ச.தனலட்சுமி சங்கர், கல்லடை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் திருமதி வீ.வளர்மதி ஆசைக்கண்ணு – குளித்தலை ஒன்றிய கவுன்சிலர்களான 9வது வார்டு கவுன்சிலர் எஸ்.ராஜேஸ்வரி, 10வது வார்டு கவுன்சிலர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் த.மா.கா.கட்சியைச் சேர்ந்த 7வது வார்டு கவுன்சிலர் எம்.சத்யா குட்டிமோகன் மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளான தோகைமலை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் டி.சின்னவழியான், தோகைமலை, கல்லடை என்.ஆசைக்கண்ணு, தோகைமலை, நாகனூர் எம்.சங்கர் மற்றும் த.மா.கா.வைச் சேர்ந்த குளித்தலை குட்டிமோகன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும் – மாண்புமிகு அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…