அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் நேற்று முன்தினம் 20 வயது இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இறந்த பெண் பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பது தெரியவந்தது. மேலும் மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா, தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 30ம் தேதி இரவு பார்த்திபன், அபிநயாவுடன் இருசக்கர வாகனத்தில் உடையார்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்துள்ளனர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அபிநயாவை அங்கேயே விட்டு விட்டு பார்த்திபன் மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
படுகாயமடைந்த அபிநயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காதலியை காப்பாற்றாமல் விட்டுச் சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…