சென்னை தாம்பரத்தில் வணிகரிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்ற தொழிலாளர் துறையின் உதவி ஆய்வாளர் பொன்னிவளவன் தொழிலாளர்கள் மீது பல்வேறு குறைகளை கூறியுள்ளார். மேலும் 50 ஆயிரம் பணம் தருமாறு கடை உரிமையாளரான ராஜனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
பணம் பறிக்கும் நோக்கில் குறைகளை கூறி லஞ்சம் கேட்ட பொன்னிவளவன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் ராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தனுப்பினர். பொன்னிவளவன் பணத்தை ராஜனிடம் வாங்கிய போது அவரை கையும் களவுமாக லஞ்சஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…