காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா வருகிற 17ம் தேதி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக வருகிற 17ம் தேதி சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் 54 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வு இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக ராஜீவ் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியை புனரமைக்கவும், 54 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முத்தழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் ராமசுகந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் பேசும்போது, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக 54 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கான கால்கோல விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இப்பகுதியை புனரமைக்கும் பணியை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…