சென்னையில் மதுபான பார் மூடப்பட்டதால் குரோம்பேட்டை நடைமேம்பாலத்தின் கீழ் பகுதியை மதுப்பிரியர்கள் பாராக மாற்றி குடிப்பதால் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ளறனர்.
மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை பாரில் வைத்து குடிப்பது வழக்கம். ஆனால் பல இடங்களில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் மதுப்பிரியர்கள் தங்களுக்கு ஏதுவாக ஒரு சில இடங்களை தேர்வு செய்து அங்கேயே மதுவை அருந்துகின்றனர்.
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை பேருந்து நிலையம் அருகே நடை மேம்பாலத்தின் அருகில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான பார் மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை பொது இடங்களிலேயே குடிக்கிறார்கள்.
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையை கடக்க கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தை மதுப்பிரியர்கள் குட்டி பாராக மாற்றி அங்கு வைத்து மதுவை குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…