பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம்பெண் குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் தவிக்கவிட்டு சென்ற கொடூர சம்பவம் சங்கரன்கோவில் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் ஒரு துணி சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.
அழுது கொண்டிருந்த குழந்தையின் சத்தம் கேட்டு அங்கே வந்த பொது மக்கள் உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற மருத்துவ ஊழியர்கள் குழந்தைக்கு முதலுதவி அளித்த பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சின்னகோவிலாகங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…