கூடுதல் நெரிசலை தவிர்க்கவும், வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகர் கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் நாகர் கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்படும். பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை ஞாயிறுதோறும் வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோயிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்படும். அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.45 மணிக்கு நாகர்கோயிலை வந்தடையும்.
இந்த ரயில்களில் பயணம் செய்ய ஜூன் 2ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாகர்கோவில்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர் நாகை நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…