சென்னையில் கஞ்சா கடத்திய 29 பேர் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 41 கிலோ எடை கொண்ட கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் பல்வேறு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி போதை தடுப்புக்கான நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகள் மூலம் கடந்த 7 நாட்களில் 41 கிலோ கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள், 385 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 650 கிராம் மெத்தகுலோன் என்ற போதைப் பொருள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளான கோடம்பாக்கம், ராயப்பேட்டை, பெரியமேடு, தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…