திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீசிய சூறாவளிக் காற்றால் சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று பலத்த சூறாவளிக் காற்று வீசியது. சூறாவளிக் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அப்படியே சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும், மின்சாரத் துறையினரும் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…