ஈரோட்டில் மளிகை கடை காரர் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன். மளிகை கடை நடத்தி வரும் இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பி உள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்செல்வன் உள்ளே இருந்த பீரோவை பார்த்து அதில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் மேல் பகுதியில் ஓடுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இது தொடர்பாக ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அருள் செல்வன் வெளியூர் சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…