காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மாநில நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே சாலையோரங்களில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு தற்போது மீண்டும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைகளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான தொடக்க விழா கீழ்க்கதிர்பூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்விமோகன் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி புதுப்பாடி – வடஇலுப்பை சாலை வாலாஜாபாத் – சுங்குவார்சத்திரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…