கடலூரைச் சேர்ந்த பொறியாளர் சுபாஷ் தனது மனைக்காக கப்பலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புது வீட்டை கப்பல் வடிவத்தில் கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
சுபாஷின் மனைவிக்கும் தன்னுடைய கணவர் போலவே தானும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த சுபாஷ், கப்பல் வடிவத்திலேயே வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.
அதன்படி கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 4,000 சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார்.
வீட்டை சுற்றி தண்ணீர் நிற்கும் வகையில், நூதனமான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.இந்த வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகளும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கியும் நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.
இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் பொழுது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகளும் அமைத்து கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த பிரமாண்டமான வீட்டை பார்த்து அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்து போய் நிற்கிறார்கள்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…