கடலூரைச் சேர்ந்த பொறியாளர் சுபாஷ் தனது மனைக்காக கப்பலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புது வீட்டை கப்பல் வடிவத்தில் கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
சுபாஷின் மனைவிக்கும் தன்னுடைய கணவர் போலவே தானும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த சுபாஷ், கப்பல் வடிவத்திலேயே வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.
அதன்படி கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 4,000 சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார்.
வீட்டை சுற்றி தண்ணீர் நிற்கும் வகையில், நூதனமான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.இந்த வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகளும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கியும் நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.
இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் பொழுது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகளும் அமைத்து கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த பிரமாண்டமான வீட்டை பார்த்து அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்து போய் நிற்கிறார்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…