திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவரை இரட்டை சகோதரிகள் காதலித்த நிலையில் 3 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்றுள்ளது.
திருவாலங்காடு ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். 10ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள் இருவரும், எதிர் வீட்டை சேர்ந்த உறவுக்கார இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது.
ஐடிஐ படித்த இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தாருக்கு தெரிந்த நிலையில் இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த 3 பேரும் கொசஸ்தலையாறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
3 பேரும் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற மக்கள், அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதி 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…