திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவரை இரட்டை சகோதரிகள் காதலித்த நிலையில் 3 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்றுள்ளது.
திருவாலங்காடு ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். 10ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள் இருவரும், எதிர் வீட்டை சேர்ந்த உறவுக்கார இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது.
ஐடிஐ படித்த இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தாருக்கு தெரிந்த நிலையில் இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த 3 பேரும் கொசஸ்தலையாறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
3 பேரும் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற மக்கள், அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதி 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…