Uncategorized

மதுரையில் துணிகரம்! 12 சவரன் நகை கொள்ளை !

by udhayatoday  •  September 5, 2022

மதுரை அழகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தன்னுடைய வீட்டில் பூட்டிவிட்டு, வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 11.5 சவரன் நகை மற்றும் 180 கிராம் வெள்ளி பொருட்கள் 45 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.

வீட்டுக்கு வந்த சரவணன், வீடு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து,வழக்குப்பதிவு செய்த காவல்துறை சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -Advertise