சுங்கச் சாவடியில் காரில் தீ – 5 பேர் தப்பினர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் திடீர் என தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மணல் விலை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் அவிநாசியில் கனி மெட்டல் மார்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஈரோட்டிற்கு தனது காரில் கடை ஊழியர்களுடன் வந்துள்ளார்.

- Advertisement - WhatsApp

அப்போது ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி வழியாக வந்த போது காரில் புகை வந்துள்ளது. இதைக் கண்டு ராஜலிங்கம், ஊழியர்கள் ஜெயராமன், அருண்குமார், மூர்த்தி, செளந்தர பாண்டியன் ஆகியோர் காரை விட்டு இறங்கித் தப்பித்தனர்.

உடனடியாக கார் தீ பற்றி எரிய தொடங்கியதுடன் காரில் இருந்து கரும் பூகை வெளியேறியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அனைத்தனர்.

இந்த சம்பவத்தால் பெருந்துறையில் இருந்து கோவை, திருப்பூர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...