சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர் பெருமாள் காலமான நிலையில் தன்னுடைய மூத்த மகனுடன் வசித்து வருகிறார். விவசாய கூலித் தொழில் செய்து வந்த சின்னப்பிள்ளையின் சேமிப்புகளை திருப்பித் தராமல் தனியார் நிதி நிறுவனங்கள் ஏமாற்றி விட்டதால் களஞ்சியம் என்ற சுய உதவிக் குழுதான் சின்னப்பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுத்தது.

இது மட்டுமின்றி வறுமை, கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்களில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரக் காரணமும் சின்னப்பிள்ளைதான். இந்த சாதனைக்காக கடந்த 2001 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சுய உதவிக் குழுக்களின் அடையாளமாகத் திகழும் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஸ்ரீ சக்தி புரஸ்கார் மாதா ஜீஜாபாய் விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை வழங்கிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வழங்கினார்.

இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் சின்னப்பிள்ளையை திரும்பிப் பார்த்து. அதன் பிறகு மும்பையில் பஜாஜ் நிறுவனம் சின்னப்பிள்ளைக்கு பஜாஜ் ஜானகி தேவி புரஸ்கார் விருதை வழங்கியது.

கடந்த 2018ல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஔவையார் விருது வழங்கினார். 2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சின்னப்பிள்ளைக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வருவதாக சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. மேலும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கவில்லை வேதனை தெரிவித்திருந்தார் சின்னப்பிள்ளை. இந்த செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த வீட்டின் மொத்த பரப்பளவு 380 சதுர அடி ஆகும். ஏற்கெனவே 1 சென்ட் இடம் உள்ள இடத்தில் மேலும் 380 சதுர அடி சேர்த்து சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருமாறு மதுரை ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதை அடுத்து மதுரை கிழக்கு தாசில்தார் பழனிகுமார் வீடு வழங்கும் ஆணையையும், நிலத்திற்கான பட்டாவையும் சின்னப்பிள்ளையிடம் வழங்கினார். ஏற்கனவே அரசு வழங்கிய ஒரு சென்ட் வீட்டு மனையுடன் 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டது

கலைஞர் கனவு திட்டம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————-

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய வாட்ஸ் சானலில் இணையுங்கள்.

https://whatsapp.com/channel/0029VaHVNkh1CYoN460xBg2N

எங்களது வாட்ஸ்செய்தி செய்தி குழுவில் இணைய 7871725717 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் நியூஸ் என மெசேஜ் அனுப்புங்கள். தனிப்பட்ட முறையில் செய்திகள் உங்களை வந்து சேர எங்களுடைய செல்போன் எண் 7871725717 உங்கள் செல்போனில் சேமித்து வைத்து நியூஸ் என வாட்ஸ்அப் மெசேஜ் செய்யவும்.

உங்கள் ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை எங்களது இணையதளத்தில் பதிய செய்திகளை udhayatoday@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

 

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

சென்னை ஒன் செயலியில் ரூ.1 டிக்கெட் ஆஃபர்; பேருந்து, மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…

2 hours ago

கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…

2 weeks ago

தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…

2 weeks ago

தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

2 weeks ago

“ஏஐ நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது” – கங்கை அமரன் வேதனை

சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…

3 weeks ago

சித்தராமையா ராஜினாமா: “வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என விளக்கம்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…

3 weeks ago