தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளிக்கான புத்தாடைகள் வாங்குவதற்கும், வீட்டுக்கு உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மதுரை மாநகரில் உள்ள நான்கு மாசி வீதிகளிலும் பொது மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் வருகின்றனர். இந்த நிலையில், மதுரை கிரைம் பிராஞ்ச் காவல் குடியிருப்பில் வசித்து வரும் பெருமாள். வயது 52. திடீர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று மேலமாசி வீதி அருகே உள்ள மதனகோபால சுவாமி கோயில் அருகே பணிகள் இருந்த பொழுது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சக காவலர்கள் அழைத்துச் சென்று பரிசோதனை செய்த பொழுது சிறப்பு சார்பு ஆய்வாளர் பெருமாள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, உயிரிழந்த காவல் அதிகாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணியில் இருந்த காவல் அதிகாரி இறந்த நிகழ்வு மதுரை காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…